மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 12 -ம் தேதி தமிழகம் வருகைதர உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள், அதாவது ஏப்ரல் 12 -ம் தேதி அன்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வருகைதர உள்ளார்.
வரும் 12-ம் தேதி மதியம் 12 மணி அளவில் மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அன்று மதியம் 3.50 மணிக்கு சிவகங்கையில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து மீண்டும் மதுரை வரும் மத்திய உள்துறை அமச்சர் அமித் ஷா, மதுரையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொண்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
மதுரை மற்றும் சிவகங்கைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அதே வேளையில், பாதுகாப்பு கருதி பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.