தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங்,
பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது. ”தீவிரவாதத்தை முன்வைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்யவேண்டும் என்பது பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் இந்தியா தனது ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி எங்கும் செல்லவில்லை. அவர் அங்கே இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார். இது மூன்றாவது முறை, நான்காவது முறையிலும் பிரதமராக மோடி இருப்பார் எனத் தெரிவித்தார்.
இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அவர் பேசியவர், தனது தாயின் மறைவின் போது தனக்கு பரோல் கூட வழங்கப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.
தனது அம்மா 27 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டாார் என்றும், ஆனால் என்னால் அம்மாவை சந்திக்க முடியவில்லை. எமர்ஜென்சியின் போது என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
ஆனால், இன்று காங்கிரஸ் எங்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று ராஜ்நாத் சிங் அவர்களை சாடினார். 1975 அவசரநிலையின் சொல்லப்படாத கதையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார்.