ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை : விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை : விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்  என்றும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் பத்திரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த வாரம் தொடங்கும் பொதுத் தேர்தலில் பாஜக 3-வது முறையாக வெற்றி பெறும். ஊழலை ஒழிப்பது எங்கள் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை. ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் எந்த அளவில் இருந்தாலும், அது நாட்டு மக்களைப் பாதிக்கிறது. மக்கள் நலனுக்காக பணத்தை திருடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை முடிவுக்கு வராது.

அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகளில் 3% மட்டுமே அரசியலுடன் தொடர்புடையது என்று கூறினார். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2014-ல் ஆட்சி அமைத்தவுடன் ஊழலை ஒழிக்க தனது அரசு நடவடிக்கை எடுத்ததாக மோடி கூறினார்.

ஊழல் அதிகாரிகளை கைது செய்துள்ளோம்.  சட்டவிரோத நிதியுதவியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்,அமலாக்கத்துறை ரூ. 5,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது, அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளில் அந்தத் தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கும்  அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 க்கு முன், ரொக்கமாக ரூ. 34 லட்சம் மட்டுமே  அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.

அதே நேரத்தில் எங்கள் அரசாங்கத்தின் கீழ் ரூ.2,200 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த பணத்தை ஏழைகளுக்கான நலத்திட்டங்களில் முதலீடு  செய்திருந்தால், எத்தனை பேர் பயனடைந்திருப்பார்கள், இளைஞர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் பல புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி இருக்கலாம் என்றார்.

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற உற்சாகம் மக்களிடையே இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் அதே உற்சாகத்துடனும் முழுமையான ஆர்வத்துடனும் அவர்களை மீண்டும் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை, உலகில் நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளும் கூட, என்.டி.ஏ அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறது,  அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து பின்வாங்குகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Tags: PM Modipm modi interviewhindustan times
ShareTweetSendShare
Previous Post

திமுக தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது : பாஜக மாநில செய்திதொடர்பாளர்

Next Post

இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies