ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை : விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
Jul 29, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை : விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்  என்றும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் பத்திரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த வாரம் தொடங்கும் பொதுத் தேர்தலில் பாஜக 3-வது முறையாக வெற்றி பெறும். ஊழலை ஒழிப்பது எங்கள் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை. ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் எந்த அளவில் இருந்தாலும், அது நாட்டு மக்களைப் பாதிக்கிறது. மக்கள் நலனுக்காக பணத்தை திருடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை முடிவுக்கு வராது.

அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகளில் 3% மட்டுமே அரசியலுடன் தொடர்புடையது என்று கூறினார். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2014-ல் ஆட்சி அமைத்தவுடன் ஊழலை ஒழிக்க தனது அரசு நடவடிக்கை எடுத்ததாக மோடி கூறினார்.

ஊழல் அதிகாரிகளை கைது செய்துள்ளோம்.  சட்டவிரோத நிதியுதவியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்,அமலாக்கத்துறை ரூ. 5,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது, அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளில் அந்தத் தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கும்  அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 க்கு முன், ரொக்கமாக ரூ. 34 லட்சம் மட்டுமே  அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.

அதே நேரத்தில் எங்கள் அரசாங்கத்தின் கீழ் ரூ.2,200 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த பணத்தை ஏழைகளுக்கான நலத்திட்டங்களில் முதலீடு  செய்திருந்தால், எத்தனை பேர் பயனடைந்திருப்பார்கள், இளைஞர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் பல புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி இருக்கலாம் என்றார்.

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற உற்சாகம் மக்களிடையே இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் அதே உற்சாகத்துடனும் முழுமையான ஆர்வத்துடனும் அவர்களை மீண்டும் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை, உலகில் நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளும் கூட, என்.டி.ஏ அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறது,  அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து பின்வாங்குகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Tags: PM Modipm modi interviewhindustan times
ShareTweetSendShare
Previous Post

திமுக தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது : பாஜக மாநில செய்திதொடர்பாளர்

Next Post

இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies