தொழிலில் முன்னேற்றம் காண திருவிற்குடி!
Oct 26, 2025, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலில் முன்னேற்றம் காண திருவிற்குடி!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாடே தன்னுடைய பழம் பதியாக கொண்டிருந்தாலும், எந்நாட்டவருக்கும் இறைவனாக விளங்குகின்ற சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய தலங்கள் அட்ட வீரட்டத்தலங்களாக சிறப்புற்று திகழ்கின்றன. அந்த அட்ட வீரட்டத் தலங்களில் சிறப்பானதாக விளங்குகின்ற தலமே ‘திருவிற்குடி’.

சாகாவரம் பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்த சலந்தரனுக்கு, அவ்வாறு வரம் தர முடியாது என்ற பிரம்மாவிடம் சலந்தரன் “கற்பில் சிறந்த என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்” என்னும் வரத்தை வலிய வாங்கி கொண்டான்.

உடல் வலிமைமிக்க சலந்தரன் தான் பெற்ற வரத்தின் காரணமாக அதிக ஆணவம் கொண்டு, தேவர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவந்தான்.

தேவர்களெல்லாம் கயிலைகக்குச் சென்று, சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சினம் கொண்ட சலந்தரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான்.

சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் அவன் முன்பு தோன்றினார். அதற்கு முன் திருமாலை சலந்தரன் வடிவில் அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் என வீட்டிற்குள் அனுமதித்தாள் பிருந்தை. நொடிப் பொழுது, வேறொருவரைத் தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.

இந்த நேரத்தில், சலந்தரனிடம் ஒரு சிறிய செயலை செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்துடன் கூறிய சலந்தரனிடம் சிவபெருமன் தனது காற் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தலை மேல் தாங்கி நில் என்று கூறினார்.

பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் வெகு வேகமாக சுற்றத் தொடங்கி, சலந்தரன் உடம்பை இருகூறாகப் பிளந்தது. சலந்தரனின் ஆணவத்தைச் சக்கரத்தால் சிவபெருமான் அழித்து வீரச் செயல் செய்த இடமே ‘ திருவிற்குடி’

திருக்கோயிலின் முன்னால் சக்கரதீர்த்தமும்,பின்புறம் சங்கு தீர்த்தமும்அமையப்பெற்று, துளசியே தலமரமாக விளங்க, ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் கம்பீரமாக விளங்கும் இத்திருக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை வீரட்டானேஸ்வரர் அருள் புரிகிறார்.

சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தியின் உற்சவத்திருமேனி அழகான ஐம்பொன் திருமேனியாக திகழ்கிறது. உற்சவர் வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியும், ஏனைய கரங்களில் மான்மழு ஏந்தியும், இன்னொரு திருக்கரத்தில் ஆயுத முத்திரை தாங்கியும் வருவோர்க்கெல்லாம் அருள் வழங்குகின்றார். திருமால் இத்தலத்து இறைவனை வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.

திருவிற் குடி வீரட்டானேஸ்வரைப் போற்றி, திருஞானசம்பந்தப் பெருமான் ஒரு பதிகமும் , அப்பர் சுவாமிகள் 2 பதிகமும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களும் தந்துள்ளனர்.

“வடிகொள் மேனியர் வானமாமதியினர் நதியினர் மதுவார்ந்த

கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினருடை புலியதளார்ப்பர்

விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம்

அடியராகி நின்றேத்தி வல்லார்தமை அருவினை அடையாவே! என்று தேவாரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய தனது இப்பதிகத்தை தினந்தோறும் ஓதுபவர்களை வினைகள் அடையாது என்றும், அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்றும், தீவினைகள், இடர்கள் அணுகாது என்றும், துன்பம் என்ற நோய் அணுகாது இருப்பார்கள் என்றும் உறுதிப்பட பாடுகிறார் .

எனவே இத்தலத்து வீரட்டானேஸ்வரை மனமுருகி வணங்கினால், நம்மை சுற்றி இருக்கும் தீயசக்திகள் விலகி ஓடும். நாம் இருக்கின்ற இடத்தில் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாழ்வில் எப்போதும் வெற்றியே தொடரும்.

Tags: Thiruvendi to see progress in business!God Siva
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

ரூ.65,000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Related News

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

Load More

அண்மைச் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies