தொழிலில் முன்னேற்றம் காண திருவிற்குடி!
Jul 29, 2026, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலில் முன்னேற்றம் காண திருவிற்குடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Apr 13, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாடே தன்னுடைய பழம் பதியாக கொண்டிருந்தாலும், எந்நாட்டவருக்கும் இறைவனாக விளங்குகின்ற சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய தலங்கள் அட்ட வீரட்டத்தலங்களாக சிறப்புற்று திகழ்கின்றன. அந்த அட்ட வீரட்டத் தலங்களில் சிறப்பானதாக விளங்குகின்ற தலமே ‘திருவிற்குடி’.

சாகாவரம் பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்த சலந்தரனுக்கு, அவ்வாறு வரம் தர முடியாது என்ற பிரம்மாவிடம் சலந்தரன் “கற்பில் சிறந்த என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்” என்னும் வரத்தை வலிய வாங்கி கொண்டான்.

உடல் வலிமைமிக்க சலந்தரன் தான் பெற்ற வரத்தின் காரணமாக அதிக ஆணவம் கொண்டு, தேவர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவந்தான்.

தேவர்களெல்லாம் கயிலைகக்குச் சென்று, சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சினம் கொண்ட சலந்தரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான்.

சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் அவன் முன்பு தோன்றினார். அதற்கு முன் திருமாலை சலந்தரன் வடிவில் அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் என வீட்டிற்குள் அனுமதித்தாள் பிருந்தை. நொடிப் பொழுது, வேறொருவரைத் தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.

இந்த நேரத்தில், சலந்தரனிடம் ஒரு சிறிய செயலை செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்துடன் கூறிய சலந்தரனிடம் சிவபெருமன் தனது காற் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தலை மேல் தாங்கி நில் என்று கூறினார்.

பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் வெகு வேகமாக சுற்றத் தொடங்கி, சலந்தரன் உடம்பை இருகூறாகப் பிளந்தது. சலந்தரனின் ஆணவத்தைச் சக்கரத்தால் சிவபெருமான் அழித்து வீரச் செயல் செய்த இடமே ‘ திருவிற்குடி’

திருக்கோயிலின் முன்னால் சக்கரதீர்த்தமும்,பின்புறம் சங்கு தீர்த்தமும்அமையப்பெற்று, துளசியே தலமரமாக விளங்க, ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் கம்பீரமாக விளங்கும் இத்திருக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை வீரட்டானேஸ்வரர் அருள் புரிகிறார்.

சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தியின் உற்சவத்திருமேனி அழகான ஐம்பொன் திருமேனியாக திகழ்கிறது. உற்சவர் வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியும், ஏனைய கரங்களில் மான்மழு ஏந்தியும், இன்னொரு திருக்கரத்தில் ஆயுத முத்திரை தாங்கியும் வருவோர்க்கெல்லாம் அருள் வழங்குகின்றார். திருமால் இத்தலத்து இறைவனை வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.

திருவிற் குடி வீரட்டானேஸ்வரைப் போற்றி, திருஞானசம்பந்தப் பெருமான் ஒரு பதிகமும் , அப்பர் சுவாமிகள் 2 பதிகமும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களும் தந்துள்ளனர்.

“வடிகொள் மேனியர் வானமாமதியினர் நதியினர் மதுவார்ந்த

கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினருடை புலியதளார்ப்பர்

விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம்

அடியராகி நின்றேத்தி வல்லார்தமை அருவினை அடையாவே! என்று தேவாரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய தனது இப்பதிகத்தை தினந்தோறும் ஓதுபவர்களை வினைகள் அடையாது என்றும், அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்றும், தீவினைகள், இடர்கள் அணுகாது என்றும், துன்பம் என்ற நோய் அணுகாது இருப்பார்கள் என்றும் உறுதிப்பட பாடுகிறார் .

எனவே இத்தலத்து வீரட்டானேஸ்வரை மனமுருகி வணங்கினால், நம்மை சுற்றி இருக்கும் தீயசக்திகள் விலகி ஓடும். நாம் இருக்கின்ற இடத்தில் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாழ்வில் எப்போதும் வெற்றியே தொடரும்.

Tags: Thiruvendi to see progress in business!God Siva
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

ரூ.65,000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies