பாஜக குறித்து தான் சொல்லாததை சொல்லியதாக சிலர் பொய் தகவல் பரப்பி வருவதாக, பாமக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ் என்ற ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக கூட்டணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதால், கூட்டணியில் இருந்து மன வருத்ததோடு விலகுவதாக, பாமக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ் என்ற ராஜகோபால் தெரிவித்துள்ளதாக, சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் செய்தி வெளியானது.
இந்த நிலையில், இது தொடர்பாக, பாமக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ் என்ற ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் சொல்லாததை சொல்லியதாக சிலர் பொய் செய்தி பரப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் நான் கூறியதாக வரும் செய்திகள் தவறானவை.
NDA கூட்டணி சார்பில், தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலையை வெற்றி பெறவைப்போம் என தெரிவித்துள்ளார்.