நாட்டின் சுதந்திரத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
காலனித்துவ நிர்வாகத்திற்கு அடக்குமுறை அதிகாரங்களை வழங்கிய ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள், பிரிட்டிஷ் படைகளால் எந்த இரக்கமும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்துள்ளார். ஜாலியன் வாலாபாக்கில் தாய்நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது இதயப்பூர்வமான அஞ்சலி.
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள். அந்த தியாகிகளின் தேசபக்தியின் உணர்வு வரும் தலைமுறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.