NDA வேட்பாளர்களுக்கு மோடி கடிதம்!
Jul 29, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NDA வேட்பாளர்களுக்கு மோடி கடிதம்!

இது சாதாரண தேர்தல் அல்ல மக்களின் ஆசியுடன் நடைபெறும் தேர்தல்! - பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Apr 18, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இது சாதாரண தேர்தல் அல்ல மக்களின் ஆசியுடன் நடைபெறும் தேர்தல் என முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக மூத்த உறுப்பினர்கள், காங்கிரஸின் 5 முதல் 6 தசாப்த கால ஆட்சியில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ள முடிவை வாழ்த்துவதாகவும், மக்களின் ஆசியுடன், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில்,

”என் அருமையான காரியகர்த்தாவே. ராம நவமி தினத்தில் இந்தக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மதிப்புமிக்க பணியை (ஐ.பி.எஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவையாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முழவதம் பா.ஜ.க அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்டவற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காக உள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும்.

கோவை மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்றவர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதையும் விட்டு கொடுக்க மாட்டோம்.

இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வைத்துக் கொள்வார்கள். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக அனைவரும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்பது இந்த தேர்தல் மூலம் தொடரும்.

இந்த தேர்தல் என்பது நமது பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்கும் பாலமாகும். பா.ஜ.க பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக்கி செல்லும். அதுமட்டுமின்றி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

கடைசி நேரத்தில், நீங்களும் மற்ற நிர்வாகிகளும் தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பீர்கள், இருப்பினும் உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல், எனவே வெயில் தொடங்குவதற்கு முன்பே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள்,” இவ்வாறு மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்ற பாஜக வேட்பாளர்களான பாரிவேந்தர், பால்கனராஜ் ஆகியோருக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

Tags: Modi letter to NDA candidates!PM Modi
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies