புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !
Aug 16, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !

ஒரு மாதகாலமாக குடிநீர் வராததால் மக்கள் போராட்டம் !!

Web Desk by Web Desk
Apr 20, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆறாவது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஒரு குடம் பத்து ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராத கண்டித்து தற்போது புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோகரணம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சிகள் வாக்கு கேட்பதற்கு மட்டும் வீடு வீடாக வந்து, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறோம் என்று கூறி வாக்குகளை சேகரித்து ஓட்டுகளை பெற்றுவிட்டு எங்களுடைய குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த ஒரு அரசியல் வாதியும் களத்தில் இறங்கி வரவில்லை என்று பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்து இன்னமும் 24 மணி நேரமே முடிவடையாத நிலையில் அரசியல் வாதிகள் மீது பொதுமக்கள் கோபம் கொண்டு களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: water ScarcityTamil NaduPudhukottaikaveri waterRoadblock protest
ShareTweetSendShare
Previous Post

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா!

Next Post

தந்தை சமாதியில் விண்ணப்பத்தை வைத்து வழிபட்ட ஒய்.எஸ்.சர்மிளா!

Related News

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies