புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !

ஒரு மாதகாலமாக குடிநீர் வராததால் மக்கள் போராட்டம் !!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆறாவது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஒரு குடம் பத்து ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராத கண்டித்து தற்போது புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோகரணம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சிகள் வாக்கு கேட்பதற்கு மட்டும் வீடு வீடாக வந்து, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறோம் என்று கூறி வாக்குகளை சேகரித்து ஓட்டுகளை பெற்றுவிட்டு எங்களுடைய குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த ஒரு அரசியல் வாதியும் களத்தில் இறங்கி வரவில்லை என்று பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்து இன்னமும் 24 மணி நேரமே முடிவடையாத நிலையில் அரசியல் வாதிகள் மீது பொதுமக்கள் கோபம் கொண்டு களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: water ScarcityTamil NaduPudhukottaikaveri waterRoadblock protest
ShareTweetSendShare
Previous Post

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா!

Next Post

தந்தை சமாதியில் விண்ணப்பத்தை வைத்து வழிபட்ட ஒய்.எஸ்.சர்மிளா!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies