பட்டியலின மற்றும் இதர பிறப்படுத்தப்பட்டேர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
2004ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஆந்திராவில் எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைத்து, முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்ததாக தெரிவித்தார்.
2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆந்திராவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் நான்கு முறை முயற்சித்ததாகவும், இருப்பினும், சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, அவர்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 2011ஆண்டு நாடு முழுவதும் இதனை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்ததாகவும், இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.