டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைவதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் நீதிமன்ற காவலை மே 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.