சந்தேஷ்காலி வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான், பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மீது, பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு சொந்தமான ரூ.12.78 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.