ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், போலீஸ் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு, இந்திய ராணுவம் சார்பில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
பால்ராவில் உள்ள கார்ப்ஸ் போர் பயிற்சி பள்ளியில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைையொட்டி, அங்கு ஆண் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.