பெரம்பலூரில், ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரகரும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினருமான W.H. சங்கர சுப்பிரமணியன் நினைவு அஞ்சலி கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரகரும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினருமான W.H. சங்கர சுப்பிரமணியன் நினைவு அஞ்சலி கூட்டம் பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.
இதில், மாநில துணைத் தலைவர் மணிவேல் கலந்து கொண்டு, W.H. சங்கர சுப்பிரமணியனுக்கு புகழாராம் சூட்டினார்.
அப்போது, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, W.H. சங்கர சுப்பிரமணியன் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.