பிள்ளை வரம் தரும் கருவளர்சேரி!
Sep 18, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிள்ளை வரம் தரும் கருவளர்சேரி!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 06:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு என இருந்தாலும், அள்ளியனைத்து, கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையென்றால், அனைத்தையும் இழந்தது போல விரக்தியின் விளிம்பிற்கு சென்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கருவளர்சேரி திருத்தலம். இந்த கோவிலின் சிறப்பை பார்ப்போம்.

தஞ்சை மாவட்டத்தில் கருவளர்சேரி என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில். கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் மருதநாநல்லூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.இங்குள்ள இறைவனின் பெயர் அகஸ்தீஸ்வரர். இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி.

இந்த கோவிலில் அகத்தியர் தனது மனைவி லோபா முத்திரையுடன் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலமாகும். இங்கு அகஸ்தியருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க கோவிலாகும்.

இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்பு என்ன வென்றால், இங்கு அம்பிகை புற்று மண்ணாக உருவெடுத்தாள் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை சுயமாக தோன்றியதால், இங்குள்ள அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

விசேஷ நாட்களில் அம்பிகைக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் 9 நாட்களில் மட்டுமே அன்னையை நேரடியாக தரிசனம் செய்ய முடியும்.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு திருமணமான தம்பதிகள் கண்ணீரை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர். காரணம், ஒரு சில பெண்ளுக்கு பல்வேறு காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப்போகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் நவீன முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும், குழந்தை வரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அப்படி, திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண் இங்கு வந்து மனம் உருகி படி பூஜை செய்தும், நெய்தீபம் ஏற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு பின்பு அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்பட்ட மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து தொடர்ந்து பூசி வந்தால் தடைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்த பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பம் அடைவது கண்கூடாக காணலாம். அப்படி கர்ப்பம் அடைந்த பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையலை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

கர்ப்பம் அடைந்த பெண்கள் இங்கு வந்து அன்னையை வேண்டினால், சிக்கல் இல்லாத பிரசவம் நடைபெறும். மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனாலேயே, இந்த கோவிலுக்கு தம்பதிகள் சகிதமாக பலரும் வந்து அன்னையின் அருளை பெற்றுச் செல்கின்றனர்.

Tags: Karularasheriwhich gives birth to children!
Share
Tweet
SendShare
Previous Post

அன்னை வருகை தினத்தை ஒட்டி சிறப்பு தியானம் !

Next Post

W.H. சங்கர சுப்பிரமணியன் நினைவு அஞ்சலி கூட்டம்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies