கோவை மாவட்டம் போடி பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கிய நிலையில், மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வை ஒட்டி, கோவில் வளாகத்தின் முன்பு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.