கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே தோட்டத் தொழிலாளிகள் இருவரை தாக்கிய புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காக்கச்சல் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம் அருகே ஆவேசமாக ஓடிவந்த புலி ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பூதலிங்கம் என்பவரையும், சாலையில் சென்று கொண்டிருந்த ஜெயன் என்பவரையும் தாக்கியது. காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே தொழிலாளிகளை தாக்கிய புலி அருகில் உள்ள தொட்டத்தில் உயிரிழந்தது கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் வனத்துறையினர், புலியை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.