கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியையிடம் செயின் பறித்ததாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெராபின் பிளவர் குயின் என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த வாரம் பள்ளி முடிந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடினார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், மாங்கோடைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது தந்தை சிவசங்கர் ஆகியோரை கைது செய்து நகையை மீட்டனர்.