திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கும்பலின் தொழில்போட்டியால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் சரணடைந்தனர்.
காயலார் மேடு கிராமத்தில் கஞ்சா விற்பனையில் இரு கும்பலுக்கிடையே ஏற்பட்ட தொழில் போட்டியால், நண்பர்களுடன் மதுஅருந்திக் கொண்டிருந்த அருண்குமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.