தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலின் உண்டியல் பணத்தைக் கொண்டு வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக – கேரள எல்லையான குமுளி மலைச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கேரளாவில் இருந்து தமிழகத்திகு வந்த கேரளப் பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, சாக்குப் பையில் சில்லறை நாணயங்களாகவும், ரூபாய் நோட்டுகளாகவும் கொண்டு வரப்பட்ட 96 ஆயிரத்து 885 ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாததாகப் பறிமுதல் செய்தனர்.
அந்தப் பணம், கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவின்போது பூசாரியின் தட்டில் பக்தர்கள் அளித்த பணம் எனக் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் உத்தமபாளையம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.