இண்டி கூட்டணி முரண்பாடான கூட்டணி எனவும், இந்த கூட்டணி வாக்கு வங்கிக்காக அமைக்கப்பட்டது என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது எனவும் நடந்து முடிந்த முதற் கட்ட வாக்குப்பதிவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்தின் டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும் எனவும், இந்த விவகாரத்தில், தமிழக அரசும், காங்கிரஸ் கட்சியும் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.