அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம்!
Oct 13, 2025, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம்!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தஞ்சை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மணல் குவாரி உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள்,மணல் குவாரிகள் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, முறைகேடுகள் நடந்ததாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா, கரூர் ஆட்சியர் தங்கவேல், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இவர்களிடம் செயற்கை கோள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடைபெற்றதோடு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்கள் அளித்த விவரங்கள் வீடியோவிலும், பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags: 5 District Collectors appeared in the enforcement office and explained!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி!

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies