கோவையில் கடும் வெப்பத்தை சமாளிக்க புதிய வழியை கையாண்ட உணவக உரிமையாளருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, ராசிபுரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய் பவன் என்ற தனியார் உணவகம் வாட்டர் ஸ்ப்ரே எனப்படும் மிஸ்டிங் சிஸ்டத்தை பொருத்தியுள்ளனர்.
இது வாடிக்கையாளர்களுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்குவதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளர் சத்யா கூறுகையில், குறைந்த செலவில் பொருத்தப்பட்ட இந்த இந்த கருவிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.