தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற காட்டாளப்பன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்தக் கோயிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர், விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.