ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி, உணவு திருவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் 25 குழுக்களாகப் பிரிந்து, பாரம்பரிய முறையில் பல்வேறு உணவு வகைகளைச் சமைத்தனர்.
தமிழக உணவுகள் மட்டுமின்றி பிற மாநிலங்களின் பாரம்பரிய உணவுகளையும், மாணவ மாணவிகள் சமைத்தனர்.
இந்த உணவுத் திருவிழாவில் சமைக்கப்பட்ட உணவுகளை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உண்டு மகிழ்ந்தனர்.