கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பாதாளச்சாக்கடை கழிவு நீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையோர கடைகளில் கழிவுநீர் புகுந்தது. மேலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கழிவுநீரில் நனைய நேரிட்டதால் கடும் அவதிக்குள்ளாகினர்.