தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து விட்டதால், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களைத் திறக்க வேண்டுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டாலும், மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பூட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களைத் திறக்க வேண்டுமென 234 தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.