தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.