புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 29 ம் தேதி முதல் கோடை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியில் வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 29ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறைக்கு பின் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.