மயிலாடுதுறை அருகே ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீசெல்வ மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இதனைத்தொடர்ந்து, பூச்சொறித்தல் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக மேளம், தாளம் முழங்க கோவிலை சென்றடைந்தனர்.
அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து காெண்டனர்.