ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தெலுங்கு தேசம் வேட்பாளர் ஒருவர் ட்ராக்டரில் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது தொண்டர்கள் செய்த சாகசத்தால் ட்ராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிங்கன்னமலா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டிடும் சிராவனி என்பவர், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, டிராக்டரில் தொண்டர்கள் படை சூழ புறப்பட்டு சென்றார்.
அப்போது சில தொண்டர்கள் டிராக்டரில் சாகசம் செய்ய முயன்றதால், டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ட்ராக்டரில் இருந்த நான்கு தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.