கிருஷ்ணகிரியில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி, காதலனுடன் கைது செய்யப்ட்டார்.
ஒசூர் அடுத்த இருதாளம் கிராமத்தை சேர்ந்த சுமதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கும் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இதனை அறிந்த சுமதியின் கணவர் ஸ்ரீதர், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி தனது காதலனுடன் சேர்ந்து கணவனை தலையணையால் அழுத்தி கொலைசெய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சுமதி மற்றும் பாலகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.