வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!
Mar 16, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தை நோக்கி சிறுவர்களும், இளைஞர்களும் படையெடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கடந்த ஆண்டை விட வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பல வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு சிலர், குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, உதகை, கொடைக்கானல் என சுற்றுலாத்தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி தண்ணீர் குடுப்பது , ஜூஸ், இளநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அருந்தி வெயிலை சமாளித்து வருகின்றனர்.

குறிப்பாக, வெப்பத்தில் இருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நோக்கி இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மெரீனாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், காலை முதல் மாலை வரை ஹவுஸ்ஃபுலாக மாறி உள்ளது.

மாநகராட்சி நீச்சல் குளத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தில் குளிக்க பலவகையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, 10 வயதுக்குள் இருப்பவர்கள், மது அருந்தியவர்கள், சட்டை பேண்ட் அணிந்து குளிப்பவர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெயிலை சமாளிக்க முடியாமல் நீச்சல் குளம் வந்துள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தூய்மையாக வைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீச்சல் குளத்தில் குளிப்பது வேற லெவலில் உள்ளதாக தெரிவிக்கும் இளைஞர்கள், கூடுதல் நீச்சல் குளங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீச்சல் குளத்தினை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது தற்போது பார்ப்போம்…

நீச்சல் குளத்தில் இரண்டு புறமும் கயிறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

மேலும், வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் குளம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கத்திரி வெயில் வரும் 4 முதல் 29 வரை உச்சத்தை தொடும் என்பதால், நெருப்பு போல் கொதிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Tags: Children and youth resorting to swimming pool to overcome the heat!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!

Next Post

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies