வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!
Jul 27, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தை நோக்கி சிறுவர்களும், இளைஞர்களும் படையெடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கடந்த ஆண்டை விட வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பல வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு சிலர், குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, உதகை, கொடைக்கானல் என சுற்றுலாத்தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி தண்ணீர் குடுப்பது , ஜூஸ், இளநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அருந்தி வெயிலை சமாளித்து வருகின்றனர்.

குறிப்பாக, வெப்பத்தில் இருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நோக்கி இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மெரீனாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், காலை முதல் மாலை வரை ஹவுஸ்ஃபுலாக மாறி உள்ளது.

மாநகராட்சி நீச்சல் குளத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தில் குளிக்க பலவகையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, 10 வயதுக்குள் இருப்பவர்கள், மது அருந்தியவர்கள், சட்டை பேண்ட் அணிந்து குளிப்பவர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெயிலை சமாளிக்க முடியாமல் நீச்சல் குளம் வந்துள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தூய்மையாக வைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீச்சல் குளத்தில் குளிப்பது வேற லெவலில் உள்ளதாக தெரிவிக்கும் இளைஞர்கள், கூடுதல் நீச்சல் குளங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீச்சல் குளத்தினை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது தற்போது பார்ப்போம்…

நீச்சல் குளத்தில் இரண்டு புறமும் கயிறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

மேலும், வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் குளம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கத்திரி வெயில் வரும் 4 முதல் 29 வரை உச்சத்தை தொடும் என்பதால், நெருப்பு போல் கொதிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Tags: Children and youth resorting to swimming pool to overcome the heat!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!

Next Post

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies