கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்...!
Jul 27, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்போதும் போல் இந்தியாவின் தலைநகர் டெல்லி வழக்கமான பரபரப்புடன் விடிந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத புதிய பரபரப்பும் கவலையும் தொற்றிக் கொண்டது. அந்த பரபரப்புக்கும் கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்… இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு…

டெல்லியில் 100 பள்ளிகளுக்கு காலை அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தன. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

உடனடியாக காவல்துறை உயரதிகாரிகள், வெடிகுண்டு சோதனை குழுக்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் என எல்லோரும் சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டன.

டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா, “வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு உரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சந்தேகப்படும் படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

‘இது வெறும் புரளி என்பதால் மக்கள் இதற்கு பீதி அடைய தேவையில்லை’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி காவல்துறை, மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்புகள் மத்திய அரசின் உத்தரவின் படி தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன.

டெல்லி துணை நிலைஆளுநர் வி.கே.சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவுகளும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.

டெல்லி காவல்துறை முழுமையாக தயாராக உள்ளது என்றும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பள்ளிகளுக்கு புரளி மின்னஞ்சலை அனுப்ப ஒரே ஐபி முகவரி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி ரஷ்யாவை சார்ந்தது. மின்னஞ்சல் அங்கிருந்துதான் வந்ததா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் எந்த பள்ளியிலும் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடக்கின்ற காலகட்டத்தில் ஒரே நாளில், பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.

யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான பாதுக்காப்பு நடவடிககைகளை எடுத்துவருகிறோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Tags: Worrying bomb threat...!
ShareTweetSendShare
Previous Post

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Next Post

272 இடங்களில்கூட போட்டியிடாத காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்!- பிரதமர் மோடி கேள்வி!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies