கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்...!
Mar 16, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்போதும் போல் இந்தியாவின் தலைநகர் டெல்லி வழக்கமான பரபரப்புடன் விடிந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத புதிய பரபரப்பும் கவலையும் தொற்றிக் கொண்டது. அந்த பரபரப்புக்கும் கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்… இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு…

டெல்லியில் 100 பள்ளிகளுக்கு காலை அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தன. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

உடனடியாக காவல்துறை உயரதிகாரிகள், வெடிகுண்டு சோதனை குழுக்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் என எல்லோரும் சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டன.

டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா, “வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு உரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சந்தேகப்படும் படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

‘இது வெறும் புரளி என்பதால் மக்கள் இதற்கு பீதி அடைய தேவையில்லை’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி காவல்துறை, மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்புகள் மத்திய அரசின் உத்தரவின் படி தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன.

டெல்லி துணை நிலைஆளுநர் வி.கே.சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவுகளும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.

டெல்லி காவல்துறை முழுமையாக தயாராக உள்ளது என்றும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பள்ளிகளுக்கு புரளி மின்னஞ்சலை அனுப்ப ஒரே ஐபி முகவரி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி ரஷ்யாவை சார்ந்தது. மின்னஞ்சல் அங்கிருந்துதான் வந்ததா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் எந்த பள்ளியிலும் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடக்கின்ற காலகட்டத்தில் ஒரே நாளில், பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.

யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான பாதுக்காப்பு நடவடிககைகளை எடுத்துவருகிறோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Tags: Worrying bomb threat...!
ShareTweetSendShare
Previous Post

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Next Post

272 இடங்களில்கூட போட்டியிடாத காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்!- பிரதமர் மோடி கேள்வி!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies