ஈரோட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னிமலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டவிசாரணையில் காரை இயக்கியவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.