அரியலூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்ராஜ், சொந்த பணி காரணமாக ஆண்டிமடம் சென்றுவிட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஜாஸ்மின் என்பவரது இருசக்கர வாகனம் இவருடைய வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அரவிந்த்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த ஜாஸ்மின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.