3 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம் உதகைக்கு முதலமைச்சர் சித்தராமையா, குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, 3 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஹெலிகாப்டர் மூலம் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ளார்.
மேலும், கர்நாடகா அமைச்சர்கள் ஜார்ஜ், மாதேவப்பா உள்ளிட்டோரும் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.