தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் மண்ணி பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதமடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
கோடை வெயிலில் மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலையில், சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.