ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது கான், சதாம் உசேன் ஆகிய இருவரும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.