சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில்கள் தாமதமாக வந்ததால் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளூர்பேட்டையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லும் ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக வெகு நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் பொதுமக்களிடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.