மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் பணியாள்கள் பேருந்து ஒன்றில் நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். எனினும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம் அடைந்தன.