விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் மழையின் காரணமாக சிசிடிவி கேமராக்கள், 45 நிமிடங்களுக்கு செயலிழந்தன.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது.
விழுப்புரம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள அறைகளில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுதானது.
தகவலறிந்த பணியாளர்கள் சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு கேமராக்களை சரிசெய்தனர். இதேபோல கடந்த 3- ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதானது குறிப்பிடத்தக்கது.