உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ’’கல்லூரி கனவு -2024’’ என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி சேராமல் உள்ள மாணவர்களை கண்டரிந்து உயர்கல்வி படிக்க வைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் எனவும் கூறினார்.