அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஓர் எம்.பி.யை 15 ஆண்டுகளாக காணவில்லை என்றால், இளவரசரே என்றாலும் கூட அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தூக்கி எறிந்துவிடுவோம் என்பதற்கு அமேதி மக்கள் சான்றாக விளங்குவதாக ஸ்மிருதி இரானி கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்ததை சுட்டிக்காட்டி அவர் விமர்சித்து பேசியுள்ளார்.