மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மயிலாடுதுறையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மதுபாலன் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.