ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகை, பணத்தை திருடிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு வீ.வீ.சி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் சண்முகம் – செல்வி தம்பதி. இத்தம்பதி தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரை வரவழைத்து வீட்டில் பூஜை செய்துள்ளனர். அப்போது வயதான தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெருமாள், 9 சவரன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியார் பெருமாளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.